Author: நாமக்கல் சிபி
•3/15/2006 07:04:00 pm
இது வரை

இன்ஸ்பெக்டர் தேவசகாயம் புன்முறுவலுடன் கூறினார்.

"ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சிவப்பிரகாஷ்! இது வரை வசந்தியோட கணவனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாலததால் வேற வழியில்லாம அந்தப் பொண்ணு இறந்தது ஒரு சமையலையில் நடந்த விப த்துதான்னு ஃபைலை குளோஸ் பண்ணினோம். நல்ல வேளையா அந்த பொண்ணே தன் கைப் பட எழுதின லெட்டர்ஸக் கொண்டு வந்தீங்க, இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் சட்டத்துல இருந்து தப்பிக்கக் கூடாது சார், எப்படியும் 4 வருஷம் உள்ள இருக்க வேண்டியிருக்க இருக்கும்னு நினைக்கறேன்"

"கண்டிப்பா சார், இந்த பாழாய்ப்போன வரதட்சணையால இன்னும் இதுபோல எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருக்கோ, உங்களுக்குதான் முக்கியமா நன்றி சொல்லணும், முடிஞ்சி போன கேஸா இருந்தாலும் மறுக்காம புகாரை ஏற்று எல்லாரையும் மறுபடி விசாரணை செஞ்சி துரிதமா நடவடிக்கை எடுத்திருக்கீங்க"

"அப்படியில்லை சார், எங்களுக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் அப்போ கிடைக்கலே! எனிவே தாங்க் யூ மிஸ்டர் சிவப்பிரகாஷ், தங்க் யூ மிஸ்டர் சக்தி, கிளம்பறேன்"

சிவப்பிரகாஷைப் பார்த்தான் சக்தி. ஏதோ ஒரு நிம்மதி தெரிந்தது அவன் முகத்தில்.

"அப்புறம் என்ன! நீ எப்போ வெளியூர் கிளம்பப் போறே?"

"நல்லா சொல்லுங்க சக்தி, திரும்பவும் பேனாவும் பேப்பருமா எங்கியாவது உட்கார்ந்திகிட்டிருக்கப் போறாரு" தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டியவாறே வெளியில் வந்தாள் தாரா.

"தாரா, சக்தி... நானும் யோசிச்சேன்.. பையனையும் அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கப் போறோம், அதனால இப்பவே ஒரு 15 நாள் அந்தமான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் நேத்தே டிக்கெட்ஸ் எடுத்துட்டேன்."

சக்தி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் தன் மகன் அஷோக்குடன் சேர்ந்து கொண்டு "ஐய்யா.. அந்தமான் போகப் போறோம்.." என்று உற்சாகமானாள் தாரா.

சக்தியும் தனது வீட்டிற்குக் கிளம்பினான். நன்கு காய்ச்சிய பசும்பாலை குறைந்த அளவு சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு சிவாவின் மேசைக்கருகில் வந்தாள் தாரா.

"என்னங்க, என்ன பண்ணுறீங்க இப்போ? டாக்டர் அங்கிள்தான் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாருல்ல?"

அவளை அன்பாக நோக்கிய சிவா
"இப்போ கதை எழுதல டியர், அந்தமான்ல என்னோட வாசகர்கள் சில பேரு இருக்காங்க, அவங்களை சந்திக்கறதுக்காக அவங்க முகவரியெல்லாம் எடுத்து வெச்சிகிட்டிருக்கேன்...."

"ஐயோடா... வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறியாச்சா? எப்படியோ போங்க சாமி" என்றவாறு டம்ளரை மேசை மீது வைத்து விட்டு நகர்ந்தாள்.

-: முற்றும் :-
டிஸ்கி : கதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

சிறு கதையாய் ஆரம்பித்து ஒரு தொடர் கதையாய் முடித்திருக்கிறேன். எனக்கு இது ஓர் நல்ல அனுபவமே .விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 13 பகுதிகளையும் தொடர்ந்து படித்த (ஓரிரு!?) வாசக உள்ளங்களுக்கும், பொறுமையிழந்து (கடுப்பாகித்தான்) பாதியில் விட்ட வாசக அன்பர்களுக்கும் திகில் கதையோ என நினைத்து திரும்பிப் பார்க்காமல் ஓடிய அனைவருக்கும் என் நன்றி.

முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே


Author: நாமக்கல் சிபி
•3/15/2006 03:21:00 pm
இது வரை

மிக நீண்ட மொனத்திற்குப் பிறகு சக்தி தொடர்ந்தான்.

"சோ, அந்த வசந்தியோட ஆவிதான் சிவாவை ஆட்கொண்டிருக்குன்னு சொல்றீங்களா டாக்டர்?"

"யெஸ்! யூ ஆர் அப்சல்யூட்டலி ரைட்"

"ஆனா அந்த ஆவியால இதுவரை எந்த தொந்தரவும் இல்லையே டாக்டர்?"

"கரெக்ட் அந்த ஆவியின் நோக்கமே மற்றவங்களுக்கு தொந்தரவு கொடுப்பதல்ல, தான் இறந்தது பிரசவத்துல அல்ல, தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் தானே மேற்கொண்ட தற்கொலைன்னு தெரியப் படுத்தனும்"

"இருக்கட்டும் ஆனா அதுக்கு சிவாவை ஏன் டாக்டர் தேர்ந்தெடுக்கனும்?"

"நல்ல கேள்வி, யாரிடமும் மனம் விட்டு சொல்ல முடியாத விஷயங்களைக் கூட ஒரு வாசகியா நிறைய கடிதங்கள் மூலம் அந்தப் பொண்ணு இவருக்கு எழுதியிருக்கா. இவரு எல்லா கடித்துக்கும் பதில் எழுதலைன்னாலும் அந்தப் பொண்ணு வசந்திக்கு தன் மனக் குமுறல்களுக்கு ஓர் வடிகாலா இருந்தது சிவாதான். மேலும் தன்னோட கதைகளில் இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் படியா எழுதறதுனால நிஜத்திலும் தனக்கொரு நல்ல முடிவை சிவாவால் தான் தர முடியும்னு வசந்தி ஆழமா நம்பியிருக்கா. அதனோட விளைவுகள்தான் சிவாவை ஆட்கொள்ள நினைச்சது!"

"இப்போ சிவாவை எப்படி குணப்படுத்தரது டாக்டர்?"

"சிம்பிள், அந்தப் பொண்ணு கொடுமைகள் செய்யப்பட்டிருக்கான்னு சொல்றதுக்கு உண்டான ஆதாரங்கள் இல்லைன்னுதான் காவல் துறை இது தற்கொலை இல்லைன்னு முடிவுக்கு வந்திருக்காங்க! சிவாகிட்டே இருக்கும் கடிதங்கள்தான் அதுக்கு ஆதாரமே. அவைகளை வெச்சி வசந்தி கணவன் மேல நடவடிக்கை எடுத்தா போதும். அந்தப் பொண்ணு சிவாவை விட்டுடும்"

"நான் சிவாகிட்டா பேசினப்போ கூட அந்த மாதிரி கடிதங்கள் பத்தி எதுவும் என்கிட்ட சொல்லலியே டாக்டர்"

"உங்கிட்ட பேசும்போது சாதாரண எழுத்தாளனா உங்க ஃபிரண்டு சிவாவா பேசியிருக்கலாம், அதனால ஒரு வாசகியோட பெர்சனல் லெட்டெர்ஸை உங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கலாம்,
மறுபடி பேசிப் பார்த்தால் எங்கே வெச்சிருக்கார்னு தெரியவரலாம்"


"ஓ.கே டாக்டர், சரி நான் கிளம்பரேன்." என்று எழுந்தான் சக்தி.

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•3/15/2006 09:49:00 am
இது வரை

கோயம்பேடு பேருந்து நிலையம். சக்தி அந்த முன் பதிவு மையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். முன்பதிவுக் கவுண்டரில் இருந்த ஆள் நிமிர்ந்து பார்த்தார்.

"எக்ஸ்கியூஸ்மி, இங்க மிஸ்டர் ராஜமாணிக்கம்.."

"ஓ ராஜமாணிக்கமா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், இப்ப வந்துடுவார்.. அதோ வந்துட்டார் பாருங்க.." என்று கை காட்டினார்.

உள்ளே நுழைந்தவாறே "யார் என்னைப் பார்க்கவா வெயிட் பண்றீங்க? அட நீங்களா? அந்த ரிசர்வேஸன் ஸ்லிப் எடுத்து வெக்கச் சொன்னீங்களே!"

"ஆமாம் சார், எடுத்து வெச்சீங்களா?'

"அதை அடுத்த நாளே எடுத்து வெச்சிட்டேன், ரெண்டே நாள்ள வரதா சொல்லிட்டு போனீங்க, ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சி, சரி இருங்க எடுத்துகிட்டு வரேன்" என்றவாரு உள்ளே நுழைந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு

"இந்தாங்க சார் அவர் கொடுத்த ரிசர்வேஷன் ஸ்லிப்போட காப்பி"

"ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றவாரே இப்போது ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர் கையில் திணித்தான் சக்தி.

அவனுக்கு வியப்பாக இருந்தது. ரிசர்வேஷன் ஸ்லிப்பில் அவன் பெயரும் , சிவா பெயரும் சரியாகவே இருந்தது. இவரும் ரிசர்வேஷன் செய்ய வந்தது சிவாதான் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் இதில் இருக்கும் எழுத்துக்கள் மட்டும் சிவாவின் எழுத்துக்களுடன் ஒத்துப் போகவில்லை.

ஏதோ ஒரு ம்உடிவுக்கு வந்தவனாய் தன் செல்பேசியை எடுத்தான்.

"ஹெல்லோ டாக்டர் தேவேந்திரன்"

"யெஸ் ஸ்பீக்கிங்க்"

"நாந்தான் சக்தி பேசுகிறேன், சிவாவுடைய நண்பன்"

"சொல்லுங்க மிஸ்டர் சக்தி, நானே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு இருந்தேன், நீங்களே கால் பண்ணிட்டீங்க"

"நானும் உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன் டாக்டர், இன்னிக்கு ஈவ்னிங்க் ஒரு 4 மணிக்கு முடியுமா முடியுமா டாக்டர்?"

"4 மணியா... ஓ.கே. நீங்க கிளினிக்குக்கு வரவேண்டாம், நேரே நான் தங்கி இருக்கற கெஸ்ட் ஹவுஸ் அடடயாறுல இருக்கு, அங்க வந்துருங்க மிஸ்டர் சக்தி"

"ஓ கே டாக்டர், ரொம்ப தேங்க்ஸ் நான் ஷார்ப்பா 4 மணிக்கு அங்க இருப்பேன்"


மாலை 4 மணிக்கு முன்னதாகவே சக்தி அவரின் இருப்பிடத்தை அடைந்தான்.

"காஃபியை எடுத்துக்குங்க சக்தி, இப்போ நான் சொல்லப் போர விஷயம் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கலாம், அல்லது அதிர்ச்சியாகவும் இருக்கலாம், நான் சொல்றதை பொறுமையா கேளுங்க, ஏதாவது சந்தேகம்னா கடைசியா நீங்க கேட்கலாம்"

"சொல்லுங்க டாக்டர்.."

"உங்க ஃபிரண்ட் சிவா, அதான் எழுத்தாளர் சிவப்பிரகாஷ் கடந்த சில நாட்களா, சில நேரங்களில் அவருடைய கட்டுப் பாட்டில் இருப்பதில்லை."

"டாக்டர் யூ மீன்..?"

"முழுசாக் கேளுங்க மிஸ்டர் சக்தி! அந்த சில நேரங்களில் அவருடைய நடவடிக்கைகள்தான் அவருக்கு சுத்தமா நினைவில் இருப்பதில்லை. அந்த நேரங்களில் அவருடைய மனசு அல்லது உள்மனசு அல்லாத ஏதோ ஒண்ணு அவரை இயக்குது"

"டாக்டர்.. தட் மீன்ஸ்..சிவாவுக்கு.....!?"

"யெஸ் யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் சக்தி...."

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•3/14/2006 10:00:00 pm
இதற்கு முன்

(வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கதாபாத்திரங்களுக்கு பெயர்சூட்டு விழா நடத்தப்பட்டது)

மாலை 6 மணி. உளவியல் மருத்துவர் Dr. தேவேந்திரனின் கிளினிக். நரைத்த தனது குறுந்தாடியைத் தடவியவாறே உற்றுப் பார்க்கிறார். மல்லாக்கச் சாய்ந்திருக்கும் நாற்காலியில் வசதியாக அமரவைக்கப் பட்டிருக்கும் எழுத்தாளர் வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.

சன்னமான மஞ்சள் வெளிச்சம்.

"ரிலாக்ஸா இருங்க, இப்போ நான் கொஞ்சம் கேள்விகள் கேட்கப்போறேன், நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும்..."

"சரி" என்று முனகலாக பதில் வருகிறது.

"ம்...இப்போ ஆரம்பிக்கறேன்.. உங்க பேரு என்ன?"

".........சிவப்பிரகாஷ்"

"உங்க சொந்த ஊர் எது?'

"...சென்னை"

"நீங்க என்ன தொழில் செய்யறீங்க?"

"எழுத்தாளரா இருக்கிறேன்..."

"சரி.. உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"ஆகிவிட்டது"

"உங்க மனைவி பேரு என்ன?"

"என் மனைவி பேரு தாரா"

"குழந்தைகள் இருக்கா?"

"ம். இருக்கு. ஒரு பையன்."

"பேரு? என்ன வயசு"

"அஷோக், வயது ரெண்டு"

மேலும் கேள்விகள் தொடர்ந்தன.

நீளமான காரிடாரில் கவலையுடன் நின்றிருந்த சிவப்பிரககஷின் மனைவி தாரா அவனது நண்பனை ஏறிட்டாள்.

"சக்தி.. உங்க பிரண்டுக்கு ஒன்னும் ஆகாதே?"

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாய்டும்.. ஒண்ணும் கவலை படாதீங்க தாரா"

என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த அறையை விட்டு வெளியே வந்தார் Dr.தேவேந்திரன்.


அந்த குளு குளு அறையில் தேவேந்திரனுக்கு எதிரில் மூவரும் அமர்ந்திருந்தனர்.

"தாரா, நீ பயப்படுற மாதிரி உன் ஹஸ்பெண்டுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, ஹெ இச் ஆல்ரைட், பட்..."

"என்ன சொல்றீங்க டாக்டர்?" என்றான் சக்தி.

"மிஸ்டர் சக்தி, சில நாட்களா ஓரிரு விஷயங்கள் மட்டும் சிவாவோட மனசுல இருந்து அழிந்து விடுகிறது. அதாவது மறந்து போய்டுறாரு. ஆனா ஆழ்மனசுல அந்த நிகழ்ச்சிகளோட பதிவு இருந்துகிட்டுதான் இருக்கு. இது எல்லா விஷயத்துலயும் நடக்கறதில்லை. பயப்படவும் தேவை இல்லை. "

"தவிர இதுக்குக் காரணம் ஓயாத உழைப்பு, மெண்டல் ஸ்டிரெஸ் போன்றவை காராணங்களா இருக்கக் கூடும் கொஞ்ச நாள் எங்கியாவது வெலியூர் போய் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்"

"தாரா.. நீ கொஞ்சம் அவரை பார்த்துக்கோ எப்பப் பாரு பேப்பரும் கையுமாவே இருப்பார்னு நினைக்கறேன், பட் யூ டோண்ட் வர்றீ! இப்போ நீங்க கிளம்பலாம், எதுக்கும் ஒன் மோர் செக் அப் தேவைப்படும்னு நினைக்கறேன்"

"அப்போ வருகிறோம் அங்கிள்"

மூவரும் தத்தமது இருக்கைகளினின்று எழுந்தனர்.

இதற்குப் பின்

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!