•2/26/2008 09:39:00 pm
அவ பேரு அம்மு! நான் செல்லமா அம்முன்னுதான் கூப்பிடுவேன்!
அவ இல்லாம என்னால தனியா இருக்க முடியுமான்னு நான் ஒரு நாளும் நினைச்சி கூட பார்த்ததில்லை!
என்னை எப்படியெல்லாம் பார்த்துக்குவா தெரியுமா?
காலையில நான் எழுந்திருக்கும்போதே மணக்க மணக்க காஃபி ரெடியா இருக்கும். கோப்பையை எடுக்க கையை நீட்டினா கை மேல செல்லமா ஒரு அடி விழும்.
"முதலில் பல் துலக்கிட்டு அப்புறம்தான் காஃபி"ன்னு சொல்லுவா!
அவசரம் அவசரமா காலைப் பணிகளை அவ செஞ்சி முடிச்சி எனனை ஆஃபீஸ் அனுப்புற அவளோட பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அப்பப்போ தன் புறங்கையாலே தன் நெத்தி வேர்வையைத் தொடச்சிக்குவா! சில நாள் டை கட்ட மறந்துட்டு கெளம்பிடுவேன். வாசல் வரை ஓடி வந்து அவளே என் கழுட்துல டை கட்டி விடுவா!
அன்னிக்கு ஒரு நாள் என் பாஸ் என்னைத் திட்டிட்டார். சோகமா வீட்டுக்கு வந்தேன்.
உள்ளே வந்தவுடனே கண்டுபிடிச்சிட்டாளே!
என் முகத்தை அவளோட ரெண்டு கையால தாங்கிகிட்டு "என்னடா ஆச்சு! ஆஃபீஸ்ல யாராச்சும் திட்டினீங்களா?" ன்னு கேட்டா பாருங்க, என் சோகம் எல்லாம் பறந்து போச்சு.
"என் செல்லத்தைத் திட்டுற அந்த ஆஃபீஸ்லே இனிமே இருக்கக் கூடாது, ரிசைன் பண்ணிடுப்பா" ன்னு சொன்னா.
"அப்புறம் என் உயிர் தேவதைக்கு நான் எப்படி நெக்லஸ், பங்களா எல்லாம் வாங்குறதாம்?"னு கேட்டேன்.
"போடா லூஸு" னு செல்லமா கோவிச்சிகிட்டா!
வேற யாராச்சும் லூஸுன்னு சொல்லி இருந்தா சண்டைக்குப் போயிடுவேன். ஆனா என் அம்மு சொன்னா எனக்குக் கோபம் வராது. என்னை அவ அப்படிக் கூப்பிடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
எனக்கு எல்லா நேரமும் துணையா அவ இருப்பா! நான் சிரிக்கிறப்போ அவ என்னன விட சந்தொசப் படுவா!
நான் அழறப்போ என்னை விட அதிகமா துடிச்சிப் போயிடுவா! என்னை அவ மடில படுக்க வெச்சிகிட்டு தலையை கோதிவிட்டு எனக்கு ஆறுதல் சொல்லுவா! அப்புறம் என் சோகம் போயிடும்
அன்னிக்கு ஒரு நாள் நான் ரொம்பவும் நேசிச்ச என் மனைவி என்னை விட்டுட்டுப் போயிட்டா! நான் ஓன்னு அழுதுட்டேன்! அன்னிக்கும் அம்முதான் என்னை மடில சாய்ச்சிகிட்டு ஆறுதல் சொன்னா! அப்போ அவ அமைதியா அழுதா! அவ கண்ணீர்த்துளிகள் என் தலல மேல சூடா விழுந்ததை என்னாலயும் உணர முடிஞ்சது!
அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் எனக்கு தினமும் ஆறுதல் சொல்ல்கிட்டு இருக்கா! நான் கூட துக்கம் சோகம் எல்லாத்தையும் மறந்துட்டேன்! ஆனாலும் தினமும் அம்முவோட மடியில படுத்துகிட்டு அழுவேன்! அவளும் அழுவா!
தினமும் என் அம்மு எனக்கு லெட்டர் போடுவா! ஆனா இந்த போஸ்ட் மேன் எந்த லெட்டரையும் கொண்டு வந்து கொடுக்குறதில்லை! ஆனாலும் என்ன எழுதியிருப்பான்னு எனக்கு தெரியும்!
இப்பக் கூட போஸ்ட்மேன் வர நேரம்தான்! அவளோட லெட்டர்க்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்!
சரி! உங்களுக்கும் நேரம் ஆகுதுன்னு நினனக்கிறேன். இப்ப அம்மு வர நேரம் ஆச்சு! எனக்கு ஊசி போட அழைச்சிட்டுப் போவாங்க! வலிக்காம போடுங்கன்னு அம்முதான் நர்ஸ்கிட்டே சொல்லி விடுவாங்க!
வரட்டா! நாளைக்குப் பார்ப்போம்!
(இதே தலைப்புல டிராஜெடி இல்லாம நம்ம இம்சையக்கா இன்னொரு கதை சொல்லுவாங்க என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)
அவ இல்லாம என்னால தனியா இருக்க முடியுமான்னு நான் ஒரு நாளும் நினைச்சி கூட பார்த்ததில்லை!
என்னை எப்படியெல்லாம் பார்த்துக்குவா தெரியுமா?
காலையில நான் எழுந்திருக்கும்போதே மணக்க மணக்க காஃபி ரெடியா இருக்கும். கோப்பையை எடுக்க கையை நீட்டினா கை மேல செல்லமா ஒரு அடி விழும்.
"முதலில் பல் துலக்கிட்டு அப்புறம்தான் காஃபி"ன்னு சொல்லுவா!
அவசரம் அவசரமா காலைப் பணிகளை அவ செஞ்சி முடிச்சி எனனை ஆஃபீஸ் அனுப்புற அவளோட பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அப்பப்போ தன் புறங்கையாலே தன் நெத்தி வேர்வையைத் தொடச்சிக்குவா! சில நாள் டை கட்ட மறந்துட்டு கெளம்பிடுவேன். வாசல் வரை ஓடி வந்து அவளே என் கழுட்துல டை கட்டி விடுவா!
அன்னிக்கு ஒரு நாள் என் பாஸ் என்னைத் திட்டிட்டார். சோகமா வீட்டுக்கு வந்தேன்.
உள்ளே வந்தவுடனே கண்டுபிடிச்சிட்டாளே!
என் முகத்தை அவளோட ரெண்டு கையால தாங்கிகிட்டு "என்னடா ஆச்சு! ஆஃபீஸ்ல யாராச்சும் திட்டினீங்களா?" ன்னு கேட்டா பாருங்க, என் சோகம் எல்லாம் பறந்து போச்சு.
"என் செல்லத்தைத் திட்டுற அந்த ஆஃபீஸ்லே இனிமே இருக்கக் கூடாது, ரிசைன் பண்ணிடுப்பா" ன்னு சொன்னா.
"அப்புறம் என் உயிர் தேவதைக்கு நான் எப்படி நெக்லஸ், பங்களா எல்லாம் வாங்குறதாம்?"னு கேட்டேன்.
"போடா லூஸு" னு செல்லமா கோவிச்சிகிட்டா!
வேற யாராச்சும் லூஸுன்னு சொல்லி இருந்தா சண்டைக்குப் போயிடுவேன். ஆனா என் அம்மு சொன்னா எனக்குக் கோபம் வராது. என்னை அவ அப்படிக் கூப்பிடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
எனக்கு எல்லா நேரமும் துணையா அவ இருப்பா! நான் சிரிக்கிறப்போ அவ என்னன விட சந்தொசப் படுவா!
நான் அழறப்போ என்னை விட அதிகமா துடிச்சிப் போயிடுவா! என்னை அவ மடில படுக்க வெச்சிகிட்டு தலையை கோதிவிட்டு எனக்கு ஆறுதல் சொல்லுவா! அப்புறம் என் சோகம் போயிடும்
அன்னிக்கு ஒரு நாள் நான் ரொம்பவும் நேசிச்ச என் மனைவி என்னை விட்டுட்டுப் போயிட்டா! நான் ஓன்னு அழுதுட்டேன்! அன்னிக்கும் அம்முதான் என்னை மடில சாய்ச்சிகிட்டு ஆறுதல் சொன்னா! அப்போ அவ அமைதியா அழுதா! அவ கண்ணீர்த்துளிகள் என் தலல மேல சூடா விழுந்ததை என்னாலயும் உணர முடிஞ்சது!
அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் எனக்கு தினமும் ஆறுதல் சொல்ல்கிட்டு இருக்கா! நான் கூட துக்கம் சோகம் எல்லாத்தையும் மறந்துட்டேன்! ஆனாலும் தினமும் அம்முவோட மடியில படுத்துகிட்டு அழுவேன்! அவளும் அழுவா!
தினமும் என் அம்மு எனக்கு லெட்டர் போடுவா! ஆனா இந்த போஸ்ட் மேன் எந்த லெட்டரையும் கொண்டு வந்து கொடுக்குறதில்லை! ஆனாலும் என்ன எழுதியிருப்பான்னு எனக்கு தெரியும்!
இப்பக் கூட போஸ்ட்மேன் வர நேரம்தான்! அவளோட லெட்டர்க்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்!
சரி! உங்களுக்கும் நேரம் ஆகுதுன்னு நினனக்கிறேன். இப்ப அம்மு வர நேரம் ஆச்சு! எனக்கு ஊசி போட அழைச்சிட்டுப் போவாங்க! வலிக்காம போடுங்கன்னு அம்முதான் நர்ஸ்கிட்டே சொல்லி விடுவாங்க!
வரட்டா! நாளைக்குப் பார்ப்போம்!
(இதே தலைப்புல டிராஜெடி இல்லாம நம்ம இம்சையக்கா இன்னொரு கதை சொல்லுவாங்க என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)
Post a Comment
சிறுகதை
|
0 விமர்சனங்கள்: