Author: நாமக்கல் சிபி
•1/24/2006 03:32:00 am
இதற்கு முன் :

ஏனோ அன்று இரவு முழுவதும் உறக்கம் வராது சிந்தனைகளுடனே புரண்டு கொண்டிருந்தேன். அதிகாலைக்கு மேல்தான் என்னையுமறியாமல் கண்ணயர்ந்தேன். அதற்குள் என் திருமதியின் கைவண்ணத்தால் என் உறவினர்களின் எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாததைப் போல விசாரிக்க வந்திருந்தனர். அவர்களிடம் பேசி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. மாமனார் வேறு விடவில்லை.

"மாப்பிள்ளை, ஏதாவது கோயிலுக்கு போய்ட்டு வரலாமா? ஒரு தடவை மந்திரிச்சிகிட்டா எல்லாம் சரியாப் போய்டும், மாப்பிள்ளை ஏதோ பயந்திருப்பார் போல"

"அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா, நீங்க கிளம்புங்க.." என்றேன்.

"என்னடா, ரெடியாகலியா நீ இன்னும்?" என்றவாறு வந்தான் என் நண்பன்.

"ஏண்டா அந்த ஊருக்கு திரும்ப போய்த்தான் ஆகணுமா என்ன?"

"போனாதான யாரு எப்ப எழுதினாங்கன்னு தெரிய வரும், ஆமா நீ என்ன பயப்படுறியா? அட்ரஸ மட்டும் குடு, நான் போய்ப்பார்க்குறேன்." என்று என் தைரியத்திற்கு வேறு சோதனை வைத்தான்.

"ச்சே, ச்சே எனக்கென்ன பயம், வேலைய விட்டுட்டு இதுக்காக அலையணுமான்னு யோசிச்சேன்"
என்று சமாளித்தவாறே புறப்பட ஆயத்தமானேன்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நானும் அவனும் நுழைந்தோம். பேருந்திற்கு அருகில் செல்லும்போதே நடத்துனர் அழைத்தார்.
"20, 21 தான உங்க சீட் நெம்பர், இன்னும் 10 நிமிஷம் கழிச்சி வந்திருந்தா அடுத்த பஸ்தான் பிடிக்கணும் நீங்க.."

"இல்லை சார், நீங்க நினைக்கற ஆள் நான் இல்லை, நான் எதுவும் ரிசர்வ் பண்ணவும் இல்லை"

"அட என்ன சார் நீங்க, போன வாரம்தான நீங்க வந்து ஒரு டிக்கெட் கேட்டீங்க, திரும்பி வந்து இன்னொரு டிக்கெட் வேணும்னு சொன்னீங்க, வேணும்னா லிஸ்ட்ல பாருங்க உங்க பேரு இருக்கான்னு"

லிஸ்டை சரி பார்த்த என் நண்பன் "என்னடா உன் பேரு தெளிவா அதுல இருக்கு, நீயே ரிசர்வ் பண்ணிட்டு மறந்துட்டியா?" என்றான். அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

"நல்ல ஆளுங்க சார் நீங்க! சரி சரி ஏறி சீட்ல உக்காருங்க, டிக்கெட் உள்ளே வந்து தர்றேன்"
என்றவாறு நகர்ந்தார்.

இதற்குப் பின்:
Post a Comment
This entry was posted on 1/24/2006 03:32:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!