Author: நாமக்கல் சிபி
•1/25/2006 05:00:00 am
இதற்கு முன்:

முக்கால் மணி நேரத்தில் பேருந்து தாம்பரத்தைத் தாண்டியிருந்தது. அமைதியாக ஏதொ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்த என் நண்பனிடம் திரும்பினேன். என்னைக் கூர்மையாகப் பார்த்தவன்

"என்ன பார்க்கறே? நானே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ஏன் இப்படி நடிக்கறேன்னு கேட்க வர்றே, அப்படித்தானே?"

எழுத்தாளனாக இருந்ததில் அடுத்தவரின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை ஓரளவிற்காவது படிக்கத் தெரிந்திருக்கிறான் போலும்.

"ஆமாம்" என்பது போல் தலையசைத்தேன்.

"ஊருக்குப் போகலாம்னு சொன்னது நீ, போகனுமான்னு தயங்கினது நான்..ரெண்டு பேருமே திடீர்னுதான் முடிவு பண்ணினோம், இதிலேர்ந்தே தெரியலியா உனக்கு..? " என்றான்.

"அதுதானே.. அவன் சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியிருக்க அவனே ரிசர்வ் செய்வானேன், என்னை வேறு அழைப்பானேன்.." என்று தோன்ரியத்தால் அப்படியே அமைத்யானேன்.

"ஸாரிடா.." என்றேன்.

"எதுக்கு இப்ப ஸாரி.. யாராக இருந்தாலும் அப்படித்தான் நினனப்பார்கள். விடு.ஆனா இதுல ஏதோ மர்மம் இருக்கு, அதைக் கண்டு பிடிப்போம் முதலில்" என்றான்.

"சரி, சரி." என்றேன் அமைதியாக.

"பய நல்லா தெளிவாத்தான் இருக்கான்" என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

"டேய் நான் தெளிவாத்தான் இருக்கிறேன்." என்றான்.

"அது சரி" என்று தலையாட்டி வைத்தேன்.

பேருந்தை விட்டு இறங்கியதும் நேரே ஒரு விடுதிக்குச் சென்றோம்.

"சார், இவர் பேருக்கு எதுனா ரூம் புக் ஆகியிருக்கா....? " என்று கேட்டுவிட்டு பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.

"அப்படி ஏதும் புக் ஆகவில்லை.." என்றனர்.

"கஷ்டம்.." என்று தலையிலடித்துக் கொண்டான் என் நண்பன்.

"சரி, ஒரு டபுள் ரூம் குடுங்க.."

சாவியைப் பெற்றுக் கொண்டு இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கல் அறையை நோக்கி நடந்தோம்.

இதற்குப் பின் :

Post a Comment
This entry was posted on 1/25/2006 05:00:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!