Author: நாமக்கல் சிபி
•2/07/2006 07:35:00 am
இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/5.html

தலையணையை முதுகிற்குக் கொடுத்தவாறு சொகுசாக கால் நீட்டி அமர்ந்திருந்த என் நண்பனை எரிச்சலாகப் பார்த்தேன்.

"என்ன இவன், பிரச்னை இவனுக்கா, எனக்கா? என்னவோ எனக்காக வந்தது போல இருக்கே!" என்று நினைத்துக் கொண்டேன்.

"ஏண்டா, தன் மனைவியைத்தவிர தன் வீட்டில வேற யாருக்கும் கதை புக் படிக்கற பழக்கமே இல்லைன்னு சொல்றாரே? பின்ன வேற யாருதான் எழுதியிருப்பான்னு நினைக்கறே?"

"என்னைக் கேட்டா, உன்னை எதுக்கு கூட்டிகிட்டு வந்தேன், அதைக் கண்டு பிடிக்கத்தான்..?

"சரி போஸ்ட் ஆஃபீஸ்ல விசாரிச்சியா?

"விசாரிச்சேனே, அந்த லெட்டர் இந்த ஊர்ல இருந்தே போஸ்ட் செய்யப்படலையாம், சென்னன முத்திரைதான் இருக்குன்னு பார்த்துட்டு சொன்னாங்க"

"ம்.. இதுக்கு பின்னாடி என்னவோ விஷயம் இருக்கு, ஒரு வேளை அந்த பெண் இறக்காமல் வேற யாரோட பாடியையோ பார்த்துட்டு அந்தப் பெண்தான்னு இவங்க நினைச்சிருக்க, அந்தப் பெண் உயிரோட சென்னையில எங்கியோ இருக்கலாம்ல"

"அப்படியே வெச்சிகிட்டாலும் அந்தப் பெண் இறந்தது பிரசவத்துலதான்னு அவளோட கணவர் சொல்றாறே, நீ சொல்ற மாதிரி பார்த்தா ஏதாவது விபத்துல அல்ல இறந்திருக்கணும்"

"இதுவும் சரிதான்..இதையே யோசிச்சிகிட்டிருந்தா எனக்கு தலைதான் வலிக்குது, அப்படியே வெளியே போய் கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வற்றேன்.." என்று எழுந்தேன்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html
Post a Comment
This entry was posted on 2/07/2006 07:35:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!